Sunday 19th of May 2024 05:47:14 AM GMT

LANGUAGE - TAMIL
-
நெடுந்தீவில் புரேவியின் கடும் தாக்கம்! பல இலட்சம் ரூபா சொத்தழிவு!

நெடுந்தீவில் புரேவியின் கடும் தாக்கம்! பல இலட்சம் ரூபா சொத்தழிவு!


புரேவி புயல் இலங்கையைக் கடந்தாலும் வடக்கு மாகாணத்தில் தொடர்ந்தும் பெய்துவரும் கடும் மழையினால் யாழ்ப்பாணம் உட்பட்ட பல பகுதிகளில் கடும் பாதிப்பினை எதிர்கொண்டுவருகின்றன.

நெடுந்தீவுப் பகுதியில் புரேவியின் தாக்கம் தொடர்ந்தும் நீடிப்பதாக அங்கிருந்து அருவிக்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த இரவு மழையுடன் வீசிய கடும் காற்றினால் கடற்கரைகளில் கட்டியிருந்த படகுகள் கரைக்கு ஏறிய நீருடன் அடித்து வரப்பட்டு கரையில் தரையில் காணப்படுகின்ற முருகைக்கற்களுடன் மோதி உடைந்திருக்கின்றன.

பல இலட்சம் ரூபா பெறுமதியான படகுகள் உடைந்தழிந்திருப்பதாக மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

கடல் நீர் கரைக்குள் புகுந்ததால் வீட்டுத் தளபாடப்பொருட்களும் சேதம் அடைந்திருக்கின்றன.

ஒவ்வொரு தேவைக்காகவும் யாழ்ப்பாணம் வரவேண்டிய நிலையில் காணப்படுகின்ற நெடுந்தீவு மக்களுக்கு அரச, அரசசார்பற்ற நிறுவனங்கள் பொதுமக்கள் உதவி வழங்கவேண்டும் என்று கோரிக்கைமுன்வைக்கப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE